பூம்புகார் தொகுதியில் அண்ணா நினைவு தின விழா

பூம்புகார் தொகுதி செம்பனார் கோவிலில் அண்ணா சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2024-02-03 11:46 GMT

அண்ணா நினைவு நாள்

அறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினம் திமுகவினரால் அனுசரிக்கப்படுகிறது. பூம்புகார் தொகுதி செம்பனார்கோவிலில் ஒன்றிய திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.திமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ விஜயபாலன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பி.எம். அன்பழகன், அமிர்த விஜயகுமார், அப்துல் மாலிக்,முருகமணி, தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப குழு பொறுப்பாளர் பி. எம். ஸ்ரீதர், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி என் ரவி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏராளமான நிர்வாகிகள் நகரில் பேரணியாக வந்தனர். தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நினைவு தினத்தை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.

Tags:    

Similar News