அதிமுக சார்பில் அன்னதானம் - ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைப்பு

அலங்காநல்லூர் அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நடந்த அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார்.

Update: 2024-05-26 07:56 GMT

அன்னதானம் 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சியில் முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் மாபெரும் சிறப்பு அன்னதானம் வழங்கும் விழா மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான், முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழரசன், கருப்பையா, மகேந்திரன், சரவணன், மாணிக்கம், ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் மனோகரன், நிர்வாகிகள் சுந்தராகவன், ராஜேஷ் கன்னா, நாட்டாமை சுந்தர், சுந்தரம், ரேவதி, முடிவார்பட்டி காமாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News