அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா

மல்லசமுத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா வெகுவிமர்சியாக நடந்தது.

Update: 2024-02-11 05:50 GMT

ஆண்டு விழா 

மல்லசமுத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்றுமுன்தினம் நடந்த ஆண்டு விழாவிற்கு, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி அனைவரையும் வரவேற்று ஆண்டு அறிக்கையை வாசித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணன், துணைத் தலைவர் ஜாகிர்உசேன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் ராமலிங்கம், வடிவேலு, குமரவேல், வெங்கடாசலம், ஜெயந்தி, எஸ்.எம்.சி., தலைவர் மாலதி, தன்னார்வளர் தண்டபாணி, உதவி தலைமை ஆசிரியர்கள், மேல்நிலை சுசிலா, இடைநிலை சங்கர் வாழ்த்துரை வழங்கினார்கள். டவுன் பஞ்., தலைவர் திருமலை சிறப்பபுரையாற்றி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ் ஆசிரியர் கந்தசாமி நன்றி கூறினார்.
Tags:    

Similar News