குமாரபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா

குமாரபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-02-08 01:46 GMT


குமாரபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் புத்தர் தெரு  அரசு தொடக்கப் பள்ளியில்  ஆண்டு விழா நடந்தது.  பள்ளியின் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி  தலைமை வகித்தார்.  அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தவர்கள், மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகள், கலைப்  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பி.டி.ஏ. தலைவர் வாசுதேவன்  பரிசுகள் வழங்கினார்.  

கவுன்சிலர் வள்ளியம்மாள், முன்னாள் தலைமையாசிரியை முத்தமிழ்செல்வி, பி.டி.ஏ, நிர்வாகிகள் பிரபாத் மகேந்திரன், பாலசுப்ரமணி, மாதேஸ்வரன், முருகன், தண்டபாணி, பாலமுருகன்  உள்பட பலர் பங்கேற்றனர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.  ஆசிரியை விசாலாட்சி  நன்றி கூறினார்

Tags:    

Similar News