சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றிய பெண்களுக்கான விருதுக்கு அறிவிப்பு
சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்;
சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றிய பெண்களுக்கான விருதுக்கு அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 16 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு, வீரதிர செயல் புரித்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 ல் பாராட்டு பத்திரமும், ரூ 1,00,000 கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கிட தகுதியானவர்களை தேர்வு செய்ய https://awards.tn.gov.in என்னும் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 31.12.2023 வரை பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்விருது தொடர்பாக தேவைப்படும் விவரங்களை ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகம் 6 வது தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது 0424- 2261405 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்