களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா 

களத்தூர் அரசுப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது

Update: 2024-02-10 11:39 GMT
பள்ளி ஆண்டு விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சு.கவிதா தலைமை வகித்தார்.  ஊராட்சி மன்ற தலைவர் தி.மாரிமுத்து, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கோ.சுகன்யா, பள்ளி மேலாண்மைக் குழு துணை தலைவர் த.சசிகலா, ஊராட்சி மன்ற உறுப்பினர் ரா.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பழனிவேல் வரவேற்றார். ஆசிரியர் ராஜஸ்ரீ ஆண்டறிக்கை வாசித்தார்.  கல்லூரணிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி (ஆ.தி.ந) தலைமை ஆசிரியர்  மு.சற்குணம், சித்துக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் தனபாக்கியம், ஆசிரியர் பயிற்றுனர் அ.ரா. சரவணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இலக்கிய மன்றம், வானவில் மன்றம், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். நிறைவாக ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.
Tags:    

Similar News