புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு வார உறுதிமொழி ஏற்பு

Update: 2023-10-30 10:34 GMT

ஊழல் தடுப்பு வார உறுதிமொழி ஏற்பு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஊழல் தடுப்பு வார உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) திரு.பெ.வே.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.து.தங்கவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.மு.செய்யது முகம்மது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.க.ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags:    

Similar News