கொடைக்கானலில் அனுமதியின்றி அடுக்குமாடி கட்டிடம்

கொடைக்கானலில் சின்னபள்ளம் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2024-03-15 14:35 GMT

கொடைக்கானலில் சின்னபள்ளம் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக அனுமதியின்றி பல்வேறு கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளம் பகுதியில் பல்வேறு அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக இப்பகுதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர், மேலும் இப்பகுதியிலேயே கட்டிட கழவிகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர், இதனை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுக்கோளும் எழுந்துள்ளது. மேலும் மலைப்பகுதியில் நடிகர்கள் அனுமிதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது,இந்த கட்டிடங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையாக எழுந்துள்ளது.
Tags:    

Similar News