புதிய தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம் !

சிவகங்கை மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் துவங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2024-01-19 12:33 GMT

சிவகங்கை மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் துவங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், தொடா் அங்கீகாரம் பெறுதல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் 2024 -25-ஆம் கல்வியாண்டுக்கு புதிதாக தொழிற்பள்ளிகள் தொடங்க விரும்பும் நிறுவனங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம், ஆய்வுக் கட்டணம் (இணைய முகவரி) நெப்ட் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளாக 29.02.2024 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 044-22501006 (113) என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News