ஈரோடு மாநகராட்சிக்கு பொது சுகாதார மேலாளர் நியமனம்: விண்ணப்பம் வரவேற்பு

ஈரோடு மாநகராட்சிக்கு பொது சுகாதார மேலாளர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

Update: 2024-01-07 09:26 GMT
ஈரோடு மாநகராட்சி

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள பொது சுகாதார மேலாளர் பணியிடம் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் , மாதம் ரூ.25,000/- சம்பளம் வழங்கப்படு, இதற்காப Msc (Zoology with Entomology as one of the subject ) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். ஏக்காரணம் கொண்டும் பணிவரன்முறை, அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை ஜனவரி-19 ந் தேதிக்குள் ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்ப கேட்டுககொள்ளப்படுகிறார்கள்.

Tags:    

Similar News