பேராவூரணி : பணிநிறைவு செய்த ராணுவ சுபேதாருக்கு பாராட்டு விழா

Update: 2023-11-05 07:13 GMT

ரயில் நிலையத்தில் வரவேற்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராணுவத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு பெற்ற, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பின்னவாசலை சேர்ந்த சுபேதார் பி.அருணாசலத்திற்கு, எம்.எஸ் விழா அரங்கில், ஞாயிற்றுக்கிழமை காலை, முன்னாள் படைவீரர்கள் நலச்சங்கம் சார்பில், பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பேராவூரணி முன்னாள் படைவீரர்கள் நலச்சங்கம், பொருளாளர் மணிமாறன் தலைமை வகித்தார். செயலர் பாலதண்டாயுதம் வரவேற்றார். ஞானசேகரன் வாழ்த்திப் பேசினார். தலைவர் நீலகண்ட சேகரன் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு முன்னாள் படைவீரர் வீரமங்கையர் சங்க மாநிலத் தலைவர் ஆலயம் திலகரத்னம், மாநில துணைத் தலைவர் பொய்யாமொழி, மாநில இணைச் செயலாளர் செந்தில்குமார், மாநில அமைப்பு செயலாளர்கள் சுப்புராஜ், வில்வலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பணிஓய்வு சுபேதார் பி.அருணாசலம் ஏற்புரையாற்றினார். நிறைவாக, சங்க இணைச் செயலாளர் திருஞானம் நன்றி கூறினார். இதில், 60 க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவத்தினர், அவர் தம் குடும்பத்தினர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பணி ஓய்வு பெற்ற திரும்பிய பி.அருணாசலத்திற்கு ரயில் நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News