திறனறி தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

Update: 2023-12-12 05:56 GMT

மாணவிகளுக்கு பாராட்டு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 11-ம் வகுப்பு மாணவி வ.லித்திகா மாநில அளவில் நடைபெற்ற தமிழக முதல்-அமைச்சரின் திறனறி தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதேபோல் மாநில அளவில் தமிழ் திறனறி தேர்வில் 11-ம் வகுப்பு மாணவி எஸ்.கிருத்திகா பங்கு பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவர்கள் 2 பேருக்கும் மாத உதவித்தொகை ரூ.1,000 வீதம் பட்டப்படிப்பு படித்து முடிக்கும் வரை தமிழக அரசால் வழங்கப்படும். மேலும் தமிழக முதல்-அமைச்சரின் திறனறித்தேர்வில் 500 மாணவிகள், 500 மாணவர்கள் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற 2 மாணவிகளுக்கும் தலைமை ஆசிரியர் ஆ.நடராஜன் பரிசு வழங்கி பாராட்டினார். உதவி தலைமை ஆசிரியை தி.வ.தமிழ்செல்வி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News