ஆரணி : ஏரிகளுக்கு அருகே செல்ல பொதுமக்களுக்கு தடை

Update: 2023-12-05 08:28 GMT

அறிவிப்பு பேனர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த மழையால் இரும்பேடு, சேவூர், அக்ராபாளையம், குன்னத்தூர், வெள்ளேரிகாமக்கூர், உள்ளிட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகின்றன. இதனை தொடர்ந்து இரும்பேடு, அக்ராபாளையம், வெள்ளேரி, உள்ளிட்ட ஏரிக்கரை பகுதிகளில் பொது மக்கள் ஏரிகளுக்கு அருகே செல்ல தடை விதித்து சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் சார்பாக எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News