திருமருகலில் அறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு திருமருகலில் திமுகவினர் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2024-02-04 02:20 GMT

அண்ணா நினைவு நாள் 

திமுக நிறுவனரும்,தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பிலும்,திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தையொட்டி திருமருகல் திமுக வடக்கு ஒன்றிய கட்சி அலுவலகத்தில் ஒன்றிய கழக செயலாளர் செல்வ செங்குட்டுவன் தலைமையில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சந்தோஷ்,ஒன்றிய அவைத்தலைவர் செந்தில்குமார்,ஒன்றிய கழக துணை செயலாளர்கள் அஞ்சா நெடுமாறன்,சுமதி மணிமாறன்,மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார்,மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் விஜயகணபதி மற்றும் கிளை செயலாளர்கள் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News