ராணுவ பணிகளுக்கான ஆள்சேர்ப்பு பேரணி

இந்திய ராணுவத்தின் சென்னை தலைமையக ஆள்சேர்ப்பு மண்டலத்தின் கீழ் பல்வேறு ராணுவ பணிகளுக்கான ஆள்சேர்ப்பு பேரணி வரும் நான்காம் தேதி முதல் 13ஆம் தேதி வரை கடலூர், அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Update: 2024-01-03 01:23 GMT

மாவட்ட ஆட்சியர்

இந்திய ராணுவத்தின் சென்னை தலைமையக ஆள்சேர்ப்பு மண்டலத்தின் கீழ் பல்வேறு ராணுவ பணிகளுக்கான ஆள்சேர்ப்பு பேரணி சென்னை ஆள்சேர்ப்பு அலுவலகம் மூலம் வரும் நான்காம் தேதி முதல் 13ஆம் தேதி வரை கடலூர், அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இம்முகாமில் உடல் தகுதி தேர்வுடன் சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற உள்ளது . மேலும் ராணுவ ஆள்சேர்ப்பு பேரணி தொடர்பான விவரங்களுக்கு இணையதள முகவரியை பார்வையிடலாம். ராணுவ பணிகளுக்கு இளைஞர்கள் உரி ஆவணங்களுடன் ஆள்சேர்ப்பு பேரணி நடைபெறும் நாள் அன்று தவறாது கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல்.
Tags:    

Similar News