சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது; இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தர்மபுரியில் இண்டூர் மொரப்பூர் மற்றும் ஏரியூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த போலீசார், அவர்களின் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-15 11:33 GMT

இண்டூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் போலீசார், நடப்பனஹள்ளி முனியப்பன் கோயில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சூதாடிய வெங்கடேசன், சண்முகம் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். ஏரியூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ராஜாமணி மற்றும் காவல்துறையினர் எம்.தண்டா பகுதியில் ரோந்து சென்ற போது, வீட்டின் அருகே சூதாடிக்கொண்டிருந்த முருகேசன், மோகன்ராஜ், ஜெயகாந்த் , ராஜேஸ்கு மார் ஆகிய 4பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 15 ஆயிரம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

அதே போல், மொரப்பூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவியாளர் ஜெயந்தி மற்றும் காவலர்கள் ரோந்து சென்ற போது, தாசரஅள்ளி சுடுகாட்டில் சூதாடிக் கொண்டு இருந்த பழனிவேல், கிருஷ்ணன் மாதையன், கிருஷ்ணன், சம்பத் குமார் ஆகிய 5பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News