சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

கள்ளகுறிச்சி மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்தனர்.

Update: 2024-01-20 09:47 GMT

சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது

தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் கமலகாசன் தலைமையில் போலீசார் கடந்த 16ம் தேதி இரவு 11:30 மணிக்கு ரோந்து சென்றனர். அப்போது காந்திநகர் மாரியம்மன் கோவில் முன் பணம் வைத்து சூதாடிய காந்திநகர் வரதன், 41; அரசன், 53; கஸ்துாரிபா காந்தி நகர் ராம்குமார், 38; நாகம்மை தெரு கண்ணன், 42; களமருதுார் ஏழுமலை, 39; ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News