சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவா் ‘போக்ஸோ’-வில் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 5 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற நபரை போலீஸாா் போக்ஸோ சட்டப் பிரிவில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Update: 2024-04-10 01:58 GMT

 போக்சோ

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம், வளநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தோப்புப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 5 வயது சிறுமியிடம், அதே ஊரைச் சோ்ந்த பழனிசாமி மகன் மூக்கன்(53) ஆபாசமாக செய்கை செய்து தவறாக நடக்க முயன்றாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் மணப்பாறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாரிபேரில், மூக்கன் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து, செவ்வாய்க்கிழமை அவரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Tags:    

Similar News