மது போதையில் ரகளை செய்த வாலிபர்கள் கைது

கெங்கவல்லி அருகே மது போதையில், பொதுமக்களை அச்சுறுத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து டூவீலரை கைப்பற்றினர்.

Update: 2024-01-03 08:05 GMT
காவல் நிலையம் 
கெங்கவல்லி அருகே புனல்வாசல் தெடாவூர் சாலையில், கிழங்கு மில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் டூவீலரில் சுற்றிக் கொண்டிருந்தனர். மது போதையில்இருந்த அவர்கள், அவ்வழியாக சென்ற பொதுமக்களை அச்சுறுத்தி, தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தகவலின்பேரில், கெங்கவல்லி எஸ்ஐ.நிர்மலா மற்றும் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுவிசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஆத்தூர் புங்கவாடி பகுதியைச் சேர்ந்த பாலாஜி(27), பூபாலன்(26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, பொது இடங்களில் மக்களுக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார்கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த டூவீலரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News