கலைத்திருவிழா போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

சேலத்தில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு கலெக்டர் பிருந்தாதேவி வழங்கினார்.

Update: 2024-02-11 10:33 GMT

மாணவிகளுடன் ஆட்சியர் 

பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பத்மவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். அவர் பேசும் போது, ‘மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் அரசால் கலைத்திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 791 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் முதல் 3 இடங்களை பிடித்த 1,306 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது’ என்றார். இந்த விழாவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணை இயக்குனர் குமார், முதன்மை கல்வி அலுவலர் கபீர், கல்லூரி தாளாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News