ஆருத்ரா தரிசனம்

சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

Update: 2023-12-28 07:17 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம், முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பக்தி பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள் . ஆருத்ரா தரிசனத்தில் திருவாதிரை விரதம் மேற்கொண்டு நடராஜரை தரிசனம் செய்வது ஐதீகம் என்பதால், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் ஊராட்சியில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சிவாலயத்தில் டிசம்பர் 27ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அங்குள்ள நடராஜர் பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தை தொடர்ந்து செண்டை மேளம் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது,

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர் மேலும் இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, வாலிகண்டபுரம வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் திருத்கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் திரு கோவில், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர், திருக்கோவில்பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், உள்ளிட்ட பல்வேறு பழமை வாய்ந்த சிவாலயங்களில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன, இதில் பக்தி பரவசத்துடன் திரளான பக்தர்கள், வழிபட்டு சென்றனர்.

Tags:    

Similar News