ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

ஸ்ரீ இளங்கிளி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Update: 2023-12-27 08:39 GMT
ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஸ்ரீ இளங்கிளி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இவ்விழாவை ஒட்டி காலை நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோபுர தரிசனத்தில் ஸ்ரீ நடராஜ பெருமானும் சிவகாமசுந்தரரும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் ..அதன் பின்னர் நடராஜ பெருமானும், சிவகாமசுந்தரரும் மாட வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்தனர்..பின்னர் விநாயகர் கோயிலில் சிவகாமசுந்தரிக்கும், நடராஜ பெருமாளுக்கும் திருவூடல் உற்சவம் நடைபெற்றது.. இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் அன்னதானம் மற்றும் சிறப்பு பிரசாதமாக ஆருத்ரா களி வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News