திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
Update: 2023-12-28 04:32 GMT
பக்தர்கள்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் கைலாசநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதையொட்டி, மலைக்கோயிலில் உள்ள நடராஜர் சிலைக்கும், அம்பாள் சிலைக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் வழிபாடு நடந்தது. கைலாசநாதர் கோயிலில் சிவகாமி உடனமர் நடராஜ ருக்கு பல்வேறு திரவியங்களால் அபிசேகம் நடந்தது. 'பின்னர், சுவாமி திருவீதி உலா வந்தார். இறைவனை சாந்தப்படுத்தும் நோக்கில் மந்திர உச்சாடனம் நடந்தது. நான்கு ரத வீதிகளில் நடந்த இறைவன் திருவீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலை வர் தங்கமுத்து, அறங்காவலர்கள் கார்த்திகேயன், அர்ஜூனன், அருணா சங்கர், பிரபாகர், கோயில் உதவி ஆணையர் ரமணி காந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.