அரூர் அரசு மகளிர் பள்ளி மாணவி முதலிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அரூர் அரசு மகளிர் பள்ளி மாணவி அரசு பள்ளிகளில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்

Update: 2024-05-10 13:40 GMT

அரூர் மாணவி சாதனை

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளை காட்டிலும் அரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு கல்வி பயின்ற கவி பாரதி எனும் மாணவி தமிழ் - 97, ஆங்கிலம் -100,கணிதம்-99, அறிவியல் -99,சமூக அறிவியல் -97,மொத்தம் - 492 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

இதனை அடுத்து சாதனை படைத்த மாணவி கவி பாரதியை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

Tags:    

Similar News