மண்டல காவல்துறையினர் இடையிலான தடகள போட்டிகள்!

கோவை, நேரு விளையாட்டு மைதானத்தில் காவல்துறை மண்டலங்களுக்கு இடையிலான 63வது தடகள போட்டிகள் இன்று நடந்தது.

Update: 2024-02-14 12:44 GMT

கோவை:நேரு விளையாட்டு மைதானத்தில் காவல்துறை மண்டலங்களுக்கு இடையிலான 63 வது தடகள போட்டிகள் இன்று நடைபெற்றது.

இதனை காவல்துறை கூடுதல் இயக்குனர் ஆயுதப்படை ஜெயராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்,மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் பவானிஸ்வரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆயுதப்படை தலைவர் திருமதி லட்சுமி துணைத் தலைவர் திருமதி விஜயலட்சுமி மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் சரவணா சுந்தர் தமிழ்நாடு சிறப்பு காவல் துறை நான்காம் மணி தளவாய் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர்.போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News