ஆத்தூர் : நரசிங்கபுரம் தார்சாலை,சாக்கடை அமைக்க MLA தலைமையில் பூமி பூஜை

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு பகுதியில் ₹17.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை சாக்கடை அமைக்க கவுன்சலர் சரண்யா சந்திரன் ஏற்பாட்டில் பூமி பூஜை ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் தலைமையில் போடப்பட்டது.

Update: 2024-02-23 06:09 GMT

பூமி பூஜை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிபுரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகள் உள்ளன. இந்நிலையில் 11 வது வார்டு பகுதியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகின்றனர் அப்பகுதியில் நகராட்சி அலுவலகம் அருகே ராமகிருஷ்ணா பள்ளி வரை சாலை மிகவும் பழுதடைந்து உள்ள நிலையில் மழை காலங்களில் அப்பகுதி மக்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹17.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாக்கடை மற்றும் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் 11வது வார்டு கவுன்சிலர் சரண்யா சந்திரன் நகர மன்ற உறுப்பினர்கள் கோபி,சுரேஷ்,காவேரி,மாலா,சித்ரா நரசிங்கபுரம் நகர செயலாளர் மணிவண்ணன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்,அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News