ஆத்தூர் : கோட்டையில் புரட்சி தலைவி பிறந்த நாள் விழா
முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவசிலைக்கு பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை.
Update: 2024-02-24 10:15 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கோட்டை பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் திருவுரு சிலை அமைந்துள்ளது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆத்தூர் நகர செயலாளர் மோகன் ஏற்பாட்டில் கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஜெயலலிதா அவர்களின் திருவுரு சிலைக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன்,ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அப்பகுதியில் பொது மக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகர ஒன்றிய செயலாளர் அதிமுகவினர் அப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்