ஆத்தூர் : 6 கோடி ஏமாற்றிய தம்பதி மீது கடன் கொடுத்தவர்கள் ஊரக காவல்நிலையத்தில் புகார் !

ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த தம்பதியர் தொழில் செய்வதாக கூறி பொதுமக்களிடம் ஆறு கோடிக்கு மேல் கடன் பெற்று தலைமறைவாகி உள்ள தம்பதியிடமிருந்து பணத்தை மீட்டுத் தரக்கோரி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊரக காவல் நிலையத்தில் புகார் மனு.

Update: 2024-03-20 06:59 GMT

புகார் 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் இவரது மனைவி வளர்மதி இருவரும் ஜவுளி வியாபாரம் பழைய இரும்பு கடை தொழில் செய்து வரும் நிலையில் காட்டுக்கோட்டை ,கள்ளக்குறிச்சி அசகளத்தூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஆறு கோடிக்கு மேல் தொழில் செய்வதாக கூறி கடன் வாங்கிக்கொண்டு ஓராண்டுக்கும் மேலாக பணம் தராமல் தலைமுறைவாகியுள்ள தம்பதியரிடமிருந்து பணத்தை மீட்டு தரக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் காட்டுக்கோட்டை பகுதியில் பணத்தை ஏமாற்றிய தம்பதியரின் தம்பியை பிடித்து ஊரக காவல் நிலையத்தில் ஒப்படைத்து எங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தனர்.
Tags:    

Similar News