ஆத்தூர் :புதிய ஒன்றிய அலுவலகத்தில் யாக பூஜை

வட்டாச்சியர் அலுவலகத்தில புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் 3.95 கோடி முதல்வர் ஜன-2 திறந்த நிலையில் இன்று யாக பூஜை செய்து புதிய கட்டிடத்தில் பணிகள் தொடங்கியது

Update: 2024-02-19 13:47 GMT

யாக பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

சேலம் மாவட்டம், ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில், ஒன்றிய அலுவலகம் உள்ளது. இங்குள்ள கட்டடம் சேதமடைந்த நிலையில் இருந்ததால், கடந்த, 2021–22ல், 3.95 கோடி ரூபாயில், புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த கட்டடத்தை, கடந்த, ஜன., 2ல், முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். ஆனால், புதிய அலுவலகத்திற்குள், ஒன்றிய குழு தலைவர், பி.டி.ஓ., உள்ளிட்ட அலுவலர்கள் செல்லாமல் இருந்தனர்.

இன்று, தி.மு.க.,வை சேர்ந்த, ஒன்றிய குழு தலைவர் பத்மினிபிரியதர்ஷினி தலைமையிலான தி.மு.க., கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், பி.டி.ஓ.,க்கள் உள்ளிட்ட அலுவலர்களுடன், அர்ச்சர்கள் வரவழைத்து, யாக குண்டம் அமைத்து, யாக பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜைக்கு பின், தற்காலிகமாக இருந்த அறைகளில் இருந்த பொருட்களை, புதிய அலுவலகத்திற்கு மாற்றம் செய்தனர்.

Tags:    

Similar News