ஏ.டி.எம். மைய கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது

திண்டிவனத்தில் ஏ.டி.எம். மைய கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது.

Update: 2023-12-25 16:24 GMT

பைல் படம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜா மகன் வசந்த ராஜ் (வயது 23). இவர் தனது நண்பருடன் சேர்ந்து செஞ்சி ரோட்டில் உள்ள பஸ்நிறுத்தம் அருகே மதுஅருந்திக்கொண்டிருந்தார். அப்போது இவருக்கும். நண்பருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற் பட்டது. இதில் ஆத்திரமடைந்த வசந்தராஜ் கிழே கிடந்த கல்லை எடுத்து நண்பர் மீது வீசினார். ஆனால் அந்த கல் நண்பர் மீது படாமல், அவருக்கு பின்னால் இருந்த தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்ணாடி மீது பட்டது. இதில் அந்த கண் ணாடி உடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தராஜை கைது செய்தனர்
Tags:    

Similar News