ஜெய் ஸ்ரீ ராம் கூறியதால் பாஜக மா.செ மீது தாக்குதல்

ஆம்பூர் அருகே ஜெய் ஸ்ரீ ராம் என கூறியதால் பாஜக மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Update: 2024-01-30 04:25 GMT

தாக்குதல் நடந்த தாபா 

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரைக்காக கட்சி நிர்வாகிகள் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.  வேலூர் பகுதியை லோகேஷ் பாஜகவின் வேலூர் மாவட்ட செயலாளராக உள்ளார்.இவர் தனது ஆதரவாளர்கள் இருவருடன் நேற்று நள்ளிரவு ஆம்பூர் அடுத்த குளிதிகை பகுதியில் உள்ள தாபாவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு பணியில் இருந்த தாபா ஊழியர் ஒருவர் பாஜக நிர்வாகிகளுடன் சகஜமாக பேசி ஜெய் ஸ்ரீ ராம்!! என கூறியுள்ளார்., பதிலுக்கு பாஜக நிர்வாகியான லோகேஷும் ஜெய் ஸ்ரீ ராம் !! என கூறியுள்ளார்., இதனை அருகாமையில் இருந்த சிலர் பார்த்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்., வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் லோகேஷ் மற்றும் உடன் இருந்த பாஜக நிர்வாகிகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடி உள்ளனர். தாக்குதலில் காயமடைந்த பாஜக நிர்வாகிகள் ஆம்பூர் மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் குறித்து ஆம்பூர் டிஎஸ்பி சரவணகுமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News