மண்டைக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியில் சம்பள பிரச்சனையில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-10 12:33 GMT
தொழிலாளி மீது தாக்குதல் 

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே அழகன்பாறை பகுதியை சேர்த்தவர் சபரிமுத்து மகன் வினோ (40) மரம் வெட்டும் தொழிலாளி. சம்பவ தினம் வினோ செவிடன் விளையை சேர்ந்த மோகன் குமார் என்பவருடன் கூலிக்கு  மரம் வெட்டும் வேலைக்கு சென்றார்.     

 அதற்கான கூலியை கொடுக்க வினோவை மோகன் குமார் அவரது  வீட்டிற்கு அழைத்திருந்தார். அதைத்தொடர்ந்து மோகன் குமார் வீட்டிற்கு வினோ கூலி வாங்க சென்றார். அப்போது மோகன் குமார் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடுத்தாராம். இதற்கு வினோ ஆயிரத்து 300 ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டார்.      

இது தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மோகன் குமார் அதே பகுதியை சேர்ந்த அஜீத் (30) ஆதிஷ் (29), தங்க ஜெகன் ஆகியோர் உடன் சேர்ந்து கம்பால் வினோவை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.      

இதில் படுகாயம் அடைந்த வினோ ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பெயரில் மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்குமார் உட்பட நான்கு பேர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News