பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

குடவாசல் அருகே பாஜக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-09 16:52 GMT

பாஜக பிரமுகர்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே காவனூர் பகுதியில் சேர்ந்தவர் மது என்ற மதுசூதனன் . இவர் பாஜகவில் முன்பு மாவட்ட அளவிலான பொறுப்பில் இருந்தவர். இவரை குடவாசல் அகர ஓகை என்ற பகுதியில் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி தப்பி சென்றுள்ளனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதுசூதனன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் . இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News