வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி - 3 பேர் கைது

ஓமலூர் அருகே வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-03-15 08:17 GMT

கைது 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேக்கம்பட்டியை அடுத்த பண்ணிக்கரடு வனப்பகுதியில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக சேர்வராயன் தெற்கு வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர் நேற்று பண்ணிகரடு பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, வனப்பகுதிக்குள் 3 பேர் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஓமலூர் தாத்தையங்கார்பட்டி வட்டக்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27), முனியப்பன் (39), மாரியப்பன் (48) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து வனப்பகுதிக்குள் நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News