வரத்து குறைவால் கத்தரிக்காய் விலை உயர்வு
By : King 24X7 News (B)
Update: 2023-11-14 09:35 GMT
கோப்பு படம்
திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளான வடமதுரை, பாடியூர், குளத்தூர், எரியோடு, வேடசந்தூர் ஆகிய பல்வேறு கிராமங்களில் நாட்டு வகை மற்றும் ப்ளூ கத்தரிக்காய் சாகுபடி அதிகளவு செய்யப்பட்டு வருகிறது. இந்த காய்கள் திண்டுக்கல் உழவர் சந்தை மற்றும் காந்தி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.40க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் கத்தரிக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து குறைந்துள்ளது. திண்டுக்கல் உழவர் சந்தையில் வழக்கத்தைவிட பாதியாக கத்தரிக்காய் வந்துள்ளது. இன்று 250 கிலோ மட்டுமே வரத்து வந்ததால் கிலோ ரூ.80 க்கு விற்கப்பட்டது.