புதுக்கோட்டையில் அரசு கல் குவாரிகள் ஏலம்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்திலுள்ள 18 அரசு கல் குவாரிகளுக்கான ஏலம் நடைபெற்றது.

Update: 2024-02-16 10:18 GMT

 மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு கல்குவாரிகள் இலுப்பூர், கீரனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ளன. இவற்றில் 18 அரசு கல் குவாரிகளுக்கான ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அரசுநிர்ணயம் செய்த தொகையைவிட அதிகமாக ஏலம் கேட்கப்பட்ட 5 குவாரிகளுக்கு ஏல உரிமங்கள் வழங்கப்பட்டன. அரசு நிர்ணயம் செய்த தொகையைவிட குறைவான ஏலம் கேட்கப்பட்ட 13 குவாரிகளுக்கு ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News