ஸ்கூட்டர் மீது லோடு ஆட்டோ மோதல்- வி எச் பி நிர்வாகி  உயிரிழப்பு

நாகர்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் விஹெச்பி மாவட்ட நிர்வாகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த அவரது மனைவி, மகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-05-01 04:13 GMT
உயிரிழந்த மகேந்திர பிரசாத்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வாட்டர் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் மகேந்திர பிரசாத் (46) இவர் விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட பொருளாளர்.  மேலும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பிஆர்ஓவாகவும் பணியாற்றி வருந்தார்.  நேற்று கடுக்கரையில் உள்ள கோவிலில் திருவிளக்கு பூஜையில்  கலந்து கொள்வதற்காக மகேந்திர பிரசாத் தனது மனைவி பிரியா மற்றும் மகள் தியா ரியா ஆகியோருடன் தனது பேட்டரி ஸ்கூட்டரில் கடுக்கரைக்கு சென்று கொண்டிருந்தார்.       

கீழபுத்தேரி நான்கு வழி சாலை சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, வடசேரி நோக்கி  வந்த ஒரு லோடு ஆட்டோ திடீரென அந்த ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மகேந்திர பிரசாத் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதி, பின்னர் புத்தேரி பெரிய குளத்தில் பாய்ந்தது.  இந்த விபத்தில் மகேந்திர பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரியா மற்றும் தியாரியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குளத்திற்குள் பாய்ந்த லோடு ஆட்டோ ஓட்டி வந்த குமார் படுகாயம் அடைந்தார்.  அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News