அவிநாசி : குட்கா குடோனுக்கு சீல் - அதிகாரிகள் அதிரடி

அவிநாசியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

Update: 2024-05-30 07:03 GMT

வீடு, கடைகளுக்கு சீல் 

பெருமாநல்லூர் அருகே கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 24ஆம் தேதி விபத்தில் சிக்கிய 2  கார்களில் இருந்து மூட்டை, மூட்டையாக 1025 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் வழக்குபதிந்து 7 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பெருமாநல்லுரில் மளிகை கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த  கோபராம்(35) என்பவரது மளிகை கடை மற்றும்  அவிநாசி கைகாட்டிபுதூரில் மளிகைக் கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டூராராம்(24), மாதாராம் (26) ஆகியோருக்கு சொந்தமான மளிகை கடை, தங்கியிருந்த வீட்டுக்கும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று சீல் வைத்தனர்.
Tags:    

Similar News