திருப்பூரில் அஞ்சலக சேமிப்பு சார்பில் விருதுகள் வழங்கும் விழா

திருப்பூரில் உள்ள கிட்ஸ் கிளப் பள்ளியில் இந்திய தபால் துறை மற்றும் அஞ்சலக சேமிப்பு சார்பில் தபால் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-04-27 14:11 GMT

விருது வழங்கல்

இந்திய தபால் துறை மற்றும் அஞ்சலக சேமிப்பு சார்பில் தபால் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு செரீப் காலனி கிட்ஸ் கிளப் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா! திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில்,

இந்திய தபால் அஞ்சல் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசுகள் விருதுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் தபால் நிலைய கண்காணிப்பாளர் ஜெயராஜ்  பாபு அவர்கள் தலைமையில் உதவி தபால் நிலைய கண்காணிப்பாளர் அசோக் குமார் அவர்கள் வரவேற்புரை,

நிகழ்த்திட சிறப்பு அழைப்பாளராக கிட்ஸ் கிளப் குழும பள்ளிக் குழுமங்களின் தலைவரும் திருப்பூர் தமிழ்ச் சங்க  செயலாளர் திரு மோகன் கே கார்த்தி அவர்கள் கலந்து கொண்டு  140 பேருக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அஞ்சல் துறை ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Tags:    

Similar News