சிக்கண்ணா அரசுகலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவ மாணவியர்கள் தேர்தலில் வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-04 14:46 GMT
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்- 2024 முன்னிட்டு வாக்களிப்பது குறித்து கல்லூரி மாணவ மாணவிகள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி)ஹிர்தியா விஜயன்,உதவி ஆணையாளர் வினோத், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ், கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மோகன் உட்பட பலர் உள்ளனர்.