சமூக வாழ்வியலுக்கான வழிகாட்டுதல் குறித்த விழிப்புணர்வு

சமூக வாழ்வியலுக்கான வழிகாட்டுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளிகளில் நடக்கவுள்ளது.

Update: 2024-01-05 10:54 GMT

சமூக வாழ்வியலுக்கான வழிகாட்டுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளிகளில் நடக்கவுள்ளது.

விருதுநகர் மாவட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு சாதி வேறுபாடுகளற்ற சமூக நல்லிணக்கம், போதைப்பொருட்களை தடுத்தல், குழந்தைத் திருமணம், சாலைப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஆகியவற்றின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘கற்றது ஒழுகு” என்ற தலைப்பில், சமூக வாழ்வியலுக்கான வழிகாட்டுதல் கல்வி நிகழ்ச்சி 2 மாதங்களுக்கு அனைத்து வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெற உள்ளது. இந்த விழிப்புணர்வு கல்வி நிகழ்ச்சியில், காவல் துறை, கல்வித்துறை, பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை, வனத்துறை, மருத்துவத்துறை, சுற்றுச்சூழல் துறை, மின்சாரத்துறை, சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட அரசுத்துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள்; அடங்கிய குழு மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கவுள்ளனர்.
Tags:    

Similar News