திருப்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் மாநகராட்சி மேயர் தலைமையில் மாணவிகள் படிக்கும் திறனை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடைபெற்றது.

Update: 2024-07-04 15:16 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் முன்னிலையில் இன்று ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் தனியார் நாளிதழின் சார்பில்,

பள்ளி மாணவியர்களுக்கு படிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து தனியார் நாளிதழ்களை வழங்கினார்கள். உடன் துணை மேயர் பாலசுப்பிரமணியம், துணை ஆணையாளர் சுல்தானா,

கல்வி குழு தலைவர், 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திவாகரன், உதவி ஆணையாளர் வினோத், பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா அமலோற்பவ மேரி, தனியார் நாளிதழின் மண்டல தலைமை அலுவலர் ஜெகதீஷ் குமார் உட்பட பலர் உள்ளனர்.

Tags:    

Similar News