மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

அரசு அலுவலகங்கள் பலர் பங்கேற்றனர்

Update: 2023-12-02 01:48 GMT

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் கணக்கெடுப்பு 2023 குறித்த தொடர்புடைய அரசுத்துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான விளக்க கூட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்
Tags:    

Similar News