திருப்பத்தூரில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திருப்பத்தூரில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-22 15:38 GMT
உறுதி மொழி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தார்.
பின்னர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..