100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு !

பாராளுமன்ற பொது தேர்தல் -2024 முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில் வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2024-04-03 10:29 GMT

விழிப்புணர்வு

பாராளுமன்ற பொது தேர்தல் -2024 முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில் வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது.திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வாக்காளர்கள் விழிப்புணர்வு‌ செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்காளர் உறுதி மொழியினை ஏற்று மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணியினை திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பூங்கொடி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி நகர் முக்கிய வீதிகளுக்கு வலம் வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Tags:    

Similar News