வளைகாப்பு விழா: செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பங்கேற்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் இல்ல வளைகாப்பு விழா செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி பங்கேற்றார்.

Update: 2024-05-30 09:53 GMT

வளைகாப்பு விழாவில் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் அடுத்த மதுரா சித்திரக்கூடம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்..இவரின் மனைவி அஸ்வினி அவர்களின் வளைகாப்பு விழா நிகழ்ச்சி நெல்வாய் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கமிட்டியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஸ்வினி அவர்களுக்கு சால்வை இணை வைத்து நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன்,வட்டார தலைவர்கள் அரிபிரசாத் , கோடீஸ்வரன், சத்தியசீலன், அன்பரசு,கருங்குழி பேரூர் தலைவர் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் முகமது சாவித்,

செங்கல்பட்டு தெற்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் வேல்விழி, அச்சரப்பாக்கம் வடக்கு வட்டார நிர்வாகிகள் கலைக்குமார்,ரமேஷ், திருவேங்கடம் மாரிமுத்து, ஜெயராமன், அஜய், லோகேஷ், புஷ்பராஜ், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News