மேட்டூர் அருகே கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா

மேட்டூர் அருகே மேச்சேரியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-10-26 09:17 GMT

சமுதாய வளைகாப்பு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் ஒருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மேட்டூர் அருகே மேச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், புடவை ஆகியவைகளை வழங்கப்பட்டது. பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு தயிர் சாதம், கருவேப்பிலை சாதம் உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறபட்டது. மேச்சேரி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இன்ப வள்ளி கர்ப்ப காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இதில் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News