படைவெட்டி மாரியம்மன் கோயில் தீமிதி விழா !!
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற படைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
Update: 2024-05-25 09:59 GMT
மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் பிரசித்தி பெற்ற படைவெட்டி மாரியம்மன் ஆலயமானது அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் வைகாசி பெருவிழா கடந்த 15ஆம் தேதி பூச்சொரிதல் உடன் தொடங்கியது. பின்னர் சுவாமி வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இதனிடையே விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.காவேரிக் கரையில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 16 அடி நீளம் அலகு குத்தியும் , சக்தி கரகம் எடுத்தும் பக்தர்கள் தீ மிதித்தனர். . தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருள மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.