பாமக வேட்பாளர் முருகன் கோவிலில் தீவிர பிரச்சாரம்

பாமக வேட்பாளர் திருப்போரூர் முருகன் கோவிலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2024-03-31 15:18 GMT
பாமக வேட்பாளர் முருகர் கோவிலில் தீவிர பிரச்சாரம்

திருப்போரூரில் காஞ்சிபுரம் தனி தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் தனது பிரச்சாரத்தை துவங்கினார்.

நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 -ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. அதன் ஒரு பகுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பாமக சார்பில் காஞ்சிபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் இன்று திருப்போரூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் தனது பிரச்சாரத்தை துவங்கினார்.

பாமக, பாஜக,அமமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று பேரூராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.. வாக்கு சேகரிப்பின் போது பாமக மாநில துணை பொது செயலாளர் திருக்கச்சூர் எஸ்.ஆறுமுகம், பாஜக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் மோகராஜா,

அமமுக மாவட்ட செயலாளர் எம் கோதண்டபாணி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள்,கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள்,நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News