ஆத்தூர்: முட்டல் ஆணை வாரி நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை

கனமழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-18 07:59 GMT

கனமழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால்,கல்லாந்த்தம் முட்டல் ஆணைவரி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஆத்தூர் முட்டல் ஏரி மற்றும் ஆணை வாரி நீர்வீழ்ச்சி, பூங்கா ஆகியவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகிறது என ஆத்தூர் வனக்கோட்ட அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News